World Tamil Blog Aggregator Thendral: அப்போ...

Sunday 9 October 2016

அப்போ...

                                                     த.மு.எ.க.ச வின்
                                                            திடல்
                          இலக்கிய சந்திப்புக்காக எழுதப்பட்ட கவிதை

அப்போ
           தண்டால் பயிற்சி இனி
           தண்டம் தானா...

          குனிந்த முதுகெல்லாம்
           நிமிர மறுக்குதே..
     
        கப்சிப் வாயிலிருந்து
         கரமுர ஒலி எப்படி...

இப்போ
        பன்னீர் தூவி வரவேற்க வேணுமோ..
 அப்போ

படக்கென்று எழுந்து நடந்து
பதற வைக்குமோ...

யார் சொல்வது உண்மை
தடுமாறுகிறது மெய்..

சொல்வது தமிழச்சி எனில்
வெல்வது யார்?

சரியான வாய்ப்பு உனக்கு
முடிந்தால் நோய் நீக்கு

இல்லையெனில் முற்றிலுமாக
அழித்துவிடு

லோலோ என அலையவைக்காமல்
அப்போலோ மௌனம் கலை
இறுக்கம் தளர்..

அப்பாவாவது சுவாசிக்கட்டும்
நிம்மதியாக..





2 comments :

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...