World Tamil Blog Aggregator Thendral: நல்லவங்களா இருக்குறது தப்பா சார்?

Saturday 10 January 2015

நல்லவங்களா இருக்குறது தப்பா சார்?

நல்லவங்களா இருக்குறது தப்பா சார்?
-
வங்கியில் உங்களுக்கு கல்விக்கடனுக்கான subsidy கிடைக்கலன்னு சொன்னாங்க..நீங்க தரச்சொன்ன படிவம் எல்லாம் தந்த பின்னும் ஏன்  சார் எனக்கு கிடைக்கலன்னு கேட்டேன்.

,மேலதிகாரியிடம் ஏன் சார் நான் தான் இதுவரை ஒழுங்கா கட்டி வரேன்ல...பிறகு ஏன் எனக்கு மட்டும் வரலனு சொல்றீங்கன்னு கேட்டேன்.

அவரும் ஆமாம் மேடம் நாமும் எங்களின் உயர் அலுவலகத்திற்கு உங்கள் சார்பா கேட்டோம் அவங்க.அரசு உத்தரவில் யார் பணம் கட்டாம நிலுவையில் வச்சிருக்காங்களோ அவங்களுக்கு மட்டும் உதவித்தொகை கொடுக்கச்சொல்லி உத்தரவு,அதனால இவங்களுக்கு இல்ல என்றார்களாம்.

..எங்க போய் முட்டிக்கிறது...என்னைக் கட்ட வேண்டாம் ,தள்ளுபடி பண்ணிடுவாங்கனு சிலர் தடுத்தப்ப...அது தவறு, வாங்குனோம்ல கட்டுவது நம் கடமைனு சொல்லி தவறாம கட்டுனதுக்கு அரசு தரும் பரிசு...இது...

இந்த உண்மை தெரிஞ்சவங்க கடன கட்டாம உதவித்தொகை வாங்கிட்டாங்க...மனசாட்சிக்கு பயந்து கட்டுனா...இப்படியாம்..

அதுவும் வாங்குன தொகையை விட 3 மடங்கு கட்டனும் போல அவ்ளோ வட்டி....வட்டி மேல் வட்டினு....

யாரும் தனியார் வங்கி கல்விக்கடன் தருதுன்னு நம்பி வாங்கிடாதீங்க...

மேலதிகாரியிடம் நல்லவங்களா இருக்குறது தப்பா சார்னு கேட்டதுக்கு சங்கடமா சிரித்தார்...நம்ம அரசு இப்படி இருக்கு ...னு

இனி கட்டுவதும் கட்டாததும் உங்கள் கையில்..

3 comments :

  1. கடனை திருப்பிக் கட்டாதவர்களை ஊக்குவிக்கும் செயலாக அல்லவா இருக்கிறது
    வாழ்க பாரதம்

    ReplyDelete
  2. அட தலைகீழாக அல்லவா இருக்கிறது! உருப்பட்டுவிடும் வங்கிகள்?!

    ReplyDelete
  3. மனசாட்சி என்றால் என்ன...? ஹிஹி...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...