World Tamil Blog Aggregator Thendral: வலைப்பூ விருது..

Sunday 14 September 2014

வலைப்பூ விருது..


விருது பெறுதல் மகிழ்வு அதனினும் மகிழ்வு பெற்ற விருதை மற்றவர்களுக்கு பகிர்ந்து அளித்து மகிழ்தல்...இதற்கெல்லாம் தனி பக்குவம் வேண்டும்....வலைப்பூ பயிற்சியில் ஆசிரியராக அறிமுகமாகி இன்று குடும்ப உறுப்பினராக மாறியுள்ள  சகோதரர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு தஞ்சையம்பதி அளித்துள்ள விருது



வலைப்பூவில் முதல் ஆளாக வந்து மற்றவர்களை ஊக்கப்படுத்தும் பண்பாளர்.ஒரே நாளில் பழகி உறவாக முடியும் இவரின் துணைவியால் மட்டுமே...மறக்க முடியாத நட்பு...இன்று நான் வலைப்பூவில் 300 படைப்புகளுக்கு மேல் எழுத அடித்தள மிட்டவர்களில் கரந்தை ஜெயக்குமார்
அவர்களும் ஒருவர்..


அவருக்கு கிடைத்துள்ள விருதினை அவர்கள் மற்றவர்களுக்கு பகிர்ந்து மகிழ்ந்துள்ளார்....அதில் நானும் ஒருவராக இருப்பது அவர் எனக்கு கொடுத்த அங்கீகாரமாக எண்ணி மகிழ்கின்றேன்...
கொடுப்பதில் இன்பம் என உணர்ந்தபின் அதை மேலும் கூட்ட எண்ணி என் விருதை நானும் பகிர்ந்து கொள்கின்றேன் மகிழ்வுடன்...இவர்களிடம் பகிர்வதால் விருதுக்கு பெருமை என்பதால்....

வலைத்தள வித்தகர்
திண்டுக்கல் தனபாலன் 

மரபு கவிதைகளால் வன்ணஓவியங்களுடன் கலக்கும் 
இன்சொல் தருமே இதம்!..

சங்க இலக்கியங்களை பாக்களால் வடிக்கும் 
தேன் மதுரத்தமிழ் கிரேஸ்
  
சமூக அக்கறை நிறைந்த ஆசிரியாகத் திகழும் 
நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை ஆசிரியர் எட்வின் 

தமிழின் இலக்கண ஆய்வுக்கட்டுரைகளால் சிறக்கும்
நடைநமது ஆசிரியர்

நகைச்சுவைகளால் கலக்கும்
தளிர் சுரேஷ்

தரமான விமர்சகராக திகழும்
ராசி.பன்னீர்செல்வம்

சமூக அக்கறையும் தமிழ் உணர்வும் நிறைந்த
வி.சி.வில்வம்

தரமான தமிழ் தங்குதடையின்றி கலக்கும்
பெருநாழி

கவிதை கட்டுரைகளால் சிறக்கும்
kaviyakavi-இனியா

அனைவருக்கும் இவ்விருதினைப்பகிர்வதில் மிக்க மகிழ்கின்றேன்....என்னைப்போல் விருது பெற்றவர்கள் பகிர்வதற்காகவே மற்றவர்களை விடுகின்றேன்....கொடுத்து மகிழ்வோம் அனைவருக்கும்...

21 comments :

  1. வாழ்த்துக்கள் தோழி மென் மேலும் விருதுகள் வந்து குவியட்டும் !இங்கு விருது பெற்றுக்கொண்ட அனைவருக்குமே என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

      Delete
  2. இவர்களில் சிலருக்கு நானும் கொடுக்க ஆசைப்பட்டேன் அக்கா,ஆன அவர்கள் ஏற்கனவே விருது பெற்றுவிட்டனரே! நீங்க விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்:)

    ReplyDelete
    Replies
    1. விருது கொடுத்த பின் தான் பார்த்தேன்மா...பல விருதுகளுக்கு தகுதியானவர்கள் தாம்...வாழ்த்துக்கு நன்றிம்மா.

      Delete
  3. விவாதக்கலை வலைப்பூவில் தினம் ஒரு விவாதம் - வாதமாக எடுத்துக்கொள்ளப்படும். நண்பர்கள் & அன்பர்கள் தங்களின் வாதத்தை முன்வைக்கலாம்..
    http://vivadhakalai.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ..வருகின்றேன் விவாதம் செய்ய..

      Delete
  4. THE VERSATILE BLOGGER AWARD – இனைப் பெற்ற சகோதரிக்கு எனது இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ...

      Delete
  5. வாழ்த்துக்கள் அனைவருக்குமாய்/

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும்...

      Delete
  6. மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த நன்றி சகோ.

      Delete
  7. வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ...உங்கள் கைகளில் விருது பெற்றதை பெருமையாகக் கருதுகின்றேன் சகோ.நன்றி

      Delete
  8. விருதினைப் பெற்று வியப்பினையும் தந்தீர்கள் தோழி!
    உங்கள் உயர்ந்த பண்பின் உச்சம் அதுவெனக் காண்கின்றேன்.

    மிக அருமை!
    விருது பெற்ற உங்களுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்!

    அற்புதமானதோர் ஆசிரியை உங்கள் கரத்தினால் நானும்
    இங்கு விருது பெற்றமை மனதில் சொல்லமுடியாத மகிழ்வைத் தருகிறது!

    மிக்க நன்றி தோழி!
    என்னுடன் சேர்ந்து விருதினைப் பெறும் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கைகளில் தவழ்வதால் விருது பெருமையடைகின்றது தோழி .வாழ்த்துகள்

      Delete
  9. Replies
    1. வணக்கம்....மிக்க நன்றி சகோ.

      Delete
  10. எனக்கும் பகிர்ந்து விட்டீர்களா? நன்றி!

    ReplyDelete
  11. அன்புச் சகோதரி!
    தங்களுக்கு என் வலையில் நன்றி கூறியுள்ளேன்!
    வந்து கருத்திடுங்கள்!

    மிக்க நன்றி!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...