World Tamil Blog Aggregator Thendral: சேனல் 4

Sunday 11 May 2014

சேனல் 4


--------------------------
ரத்த குளத்தில் தமிழனின்
 படுக்கை.....

சிதறிவிழும் உறுப்புகள்
சிங்கத்தின் உணவாய்..

பதுங்கு குழிக்குள்
நெருப்புக்கோழியாய்
தலைமறைத்து..

ஷெல் முத்தமிட்ட
குழந்தைகள்....

துவக்குகளின் பசிவெறிக்கு
தமிழனின் உயிர்.....


கருகும் தமிழனை
காணாது
களித்து வாழும் தமிழினம்
சுரணையின்றி....

ஈழ தமிழரின்
ஈரம் துடைக்காத
ஈன வாழ்க்கை...

இருக்கிறோம் நாமும்
இல்லாமலே.....

No comments :

Post a Comment

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...