World Tamil Blog Aggregator Thendral: சொல் சொல்

Monday 14 October 2013

சொல் சொல்

சொல்லுன்னு எளிதாக கூறுவோம் .கிருபானந்த வாரியாரிடம் கேட்டால் எப்படி சொல்லச் சொல்றேன்னு கேட்பார்.

கம்பனின் கவிநயம் ----நூலில்
---------------------------
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங் கில்--
திருக்குறள்

சொல்லின் பொருள்வளம் கிருபானந்தவாரியாரின் நூலில் படித்த போது வியக்காமல் இருக்க முடியவில்லை.

சொல்லுதல்---- சிறப்பு பொருள்
-------------------------------------------------------

1.அசைத்தல் - அசையழுத்தத்துடன் சொல்லுதல் .

2.அறைதல் -வன்மையாக மறுத்து சொல்லல்.

3. இசைத்தல்-ஓசை வேறுபாட்டுடன் சொல்லுதல்.

4.இயம்புதல்-மேளம் போல் ஓங்கிச் சொல்லுதல்.


5.உரைத்தல்-அருஞ்சொற்கு அல்லது செய்யுளுக்கு பொருள்

சொல்லுதல்.

6.உளறுதல்-ஒன்றிருக்க ஒன்றைச் சொல்லுதல்.

7.என்னுதல்-என்று சொல்லுதல்.

8.ஓதுதல்-காதிற்குள் மெல்லச் சொல்லுதல் .

9.கத்துதல்-குரல் எழுப்பிச் சொல்லுதல்.

10.கரைதல்-அழைத்துச் சொல்லுதல்.

11.கழறுதல்-கடிந்து சொல்லுதல்.

12.கிளத்தல்-இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்லுதல்.

13.கிளத்துதல்-குடும்ப வரலாறு சொல்லுதல்.

 14.குயிலுதல்
குயிற்றுதல் ]-குயில் போல் இன்குரலில் சொல்லுதல்.

15.குழறுதல்-நாத் தளர்ந்து சொல்லுதல்.

16.கூறுதல்-கூறுபடுத்திச் சொல்லுதல்.

17.சாற்றுதல்-பலரறியச் சொல்லுதல்.

18.செப்புதல்-வினாவிற்கு விடை சொல்லுதல்.

19.சொல்லுதல்-உள்ளத்துக் கருத்தைச் சொல்லுதல்.

20.நவிலுதல்-நாவினால் ஒலித்துச் சொல்லுதல்.

21.நுதலுதல்-ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்.

22.நுவலுதல்- நூலின் நுண் பொருள் சொல்லுதல்.

23.நொடித்தல்-கதை சொல்லுதல்.

24.பகர்தல்-பண்டங்களைப் பகுத்து விலை சொல்லுதல்.

25.பறைதல்-கமுக்கம்
(இரகசியம்)வெளிப்படுத்திச் சொல்லுதல்.

26.பன்னுதல்-நிறுத்தி நிறுத்திச் சொல்லுதல்.

27.பனுவுதல்-செய்யுளில் புகழ்ந்து சொல்லுதல்.

28 .புகலுதல்-விரும்பிச் சொல்லுதல்.

29.புலம்புதல்-தனக்குத்தானே சொல்லுதல்.

30.பேசுதல்-சாமான்யமாகச் சொல்லுதல்.

31.பொழிதல்-இடைவிடாது சொல்லுதல்.

32.மாறுதல்-உரையாடலில் மாறிச் சொல்லுதல்.

33.மிழற்றுதல்-மழலைபோல் இனிமையாகச் சொல்லுதல்.

34.மொழிதல்-சொற்களைத் தெளிவாகப் பலுக்கிச் சொல்லுதல்.

35.வலத்தல்-கேட்பார் மனத்தைப் பிணிக்கச் சொல்லுதல்.

36.விடுதல்-மெல்ல வெளிவிட்டுச் சொல்லுதல்.

37.விதத்தல்- சிறப்பாக எடுத்துச் சொல்லுதல்.

38.விள்ளுதல்-வெளிவிட்டுச் சொல்லுதல்


.39.விளத்துதல்- விளக்கிச்(விரித்து) சொல்லுதல்.

40.விளம்புதல்-விளக்கமாகச் சொல்லுதல்.

இப்ப நீங்க எப்படி பேசுறீங்க..?


No comments :

Post a Comment

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...